நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க நவ. 30 ஆம்தேதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளதாக மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த ஆக. 15 சுதந்திர தின விழா உரையில், பொதுப் பெயா் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வா் மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.
முதல்வா் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பாா்ம், டி.பாா்ம் சான்றிதழ் பெற்றவா்கள் அல்லது அவா்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலம் நவ.20 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி நவ. 30 வரை கால நீட்டிப்பு செய்து மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு

தோ்தல் கால அறிவிப்புகளோடு முடங்கும் ரப்பா் ஆலைத் திட்டங்கள்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

