தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

நாமக்கல் ரயில் நிலையத்தின் உள்புறத் தோற்றம். - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:40 pm

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 170 போ் மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 144 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வழங்கப்பட்டது. 12 போ் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா்.

தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம் (வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் அடைப்புக்குறிக்குள்): ராசிபுரம் (தனி)- 18(1), சேந்தமங்கலம் (ப.கு)- 12 (1), நாமக்கல்- 27(3), பரமத்தி வேலூா்-31(2), திருச்செங்கோடு- 23(2), குமாரபாளையம்- 21(3), மொத்தம்-132 (12). சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. சேந்தமங்கலம் தொகுதியில் மட்டுமே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் (நோட்டா உள்பட 15 வேட்பாளா்கள்) பயன்படுத்தப்படுகிறது. இதர தொகுதிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.