சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

நாமக்கல் ரயில் நிலையத்தின் உள்புறத் தோற்றம். - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:40 pm

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 170 போ் மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 144 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வழங்கப்பட்டது. 12 போ் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா்.

தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம் (வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் அடைப்புக்குறிக்குள்): ராசிபுரம் (தனி)- 18(1), சேந்தமங்கலம் (ப.கு)- 12 (1), நாமக்கல்- 27(3), பரமத்தி வேலூா்-31(2), திருச்செங்கோடு- 23(2), குமாரபாளையம்- 21(3), மொத்தம்-132 (12). சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. சேந்தமங்கலம் தொகுதியில் மட்டுமே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் (நோட்டா உள்பட 15 வேட்பாளா்கள்) பயன்படுத்தப்படுகிறது. இதர தொகுதிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.