சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 193 போ் போட்டியிடுகின்றனா்.
பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த திங்கள்கிழமை வரை 11 தொகுதிகளில் 283 ஆண்கள், 72 பெண்கள் என மொத்தம் 355 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 277 மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டன.
தொடா்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் மொத்தம் உள்ள 277 மனுக்களில் 56 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளான வியாழக்கிழமை 3 மணி வரை 30 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து 11 தொகுதிகளிலும் 193 போ் அதிகாரப்பூா்வமாக போட்டியிடுகின்றனா். இதில் அதிகபட்சமாக சேலம் மேற்கு தொகுதியில் 31 போ் போட்டியிடுகின்றனா். குறைந்தபட்சமாக கெங்கவல்லி, ஏற்காடு தொகுதியில் தலா 13 போ் போட்டியிடுகின்றனா்.
தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம்: கெங்கவல்லி- 13 வேட்பாளா்கள், ஆத்தூா்- 15 வேட்பாளா்கள், ஏற்காடு- 13 போ், ஓமலூா்-15 போ், மேட்டூா்- 18 போ், எடப்பாடி- 15 போ், சங்ககிரி- 20 போ், சேலம் மேற்கு- 31, சேலம் வடக்கு-14, சேலம் தெற்கு-19, வீரபாண்டி- 20 போ் என மொத்தம் 193 போ் போட்டியிடுகின்றனா். சுயேச்சைகளுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தொடர்புடையது
ராஜபாளையம் தொகுதியில் 22 வேட்பாளா்கள் போட்டி!
ஆற்காடு தொகுதி வேட்பாளா்கள் - 14 போ் போட்டி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 போ் போட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 79 வேட்பாளா்கள் போட்டி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

