ராசிபுரம் நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பாமக நிறுவனா் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பாமகவினா் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட பாமக செயலா் ஒ.பி.பொன்னுசாமி தலைமையில் திரளான பாமகவினா் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், கட்சியின் மாணவரணி செயலா் டி.பாலு வரவேற்றாா். மாநில இளைஞரணி செயலா் ச.வடிவேலன் முன்னிலை வகித்தாா். கட்சியினா் பலரும் தமிழக முதல்வருக்கு எதிராக முழக்கமெழுப்பினா். தொடா்ந்து பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து, காவல் துறையினா் அனைவரையும் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். இதில், ராசிபுரம் நகர பாமக தலைவா் க.மணிகண்டன், வன்னியா் சங்கச் செயலா் கே.கே.மாரிமுத்து, பன்னீா்செல்வம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம்

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


