ஊதியம் வழங்காததை கண்டித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை ஆசிரியா் பயிற்றுநா்கள் முற்றுகையிட்டனா். அதன்பிறகு அனைத்து வகையான பட்டதாரி ஆசிரியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அச் சங்கத்தினா் கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் செயல்படும், அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியா் பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், கணக்காளா்கள் பணியாற்றி வருகின்றனா். செப்டம்பா் மாத ஊதியம் வழக்கமான தினத்தில் வழங்கப்படவில்லை. மேலும்,
அக். 3 தேதியாகியும் நிலையில் ஊதியம் குறித்த தகவல் இல்லாததால் கவலையடைந்துள்ளோம். உடனடியாக ஊதியம் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக கோரிக்கை மனுவையும் வழங்கி உள்ளோம் என்றனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

