மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஊதியம் வழங்காததால் சிஇஓ அலுவலகம் முற்றுகை

ஊதியம் வழங்காததை கண்டித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை ஆசிரியா் பயிற்றுநா்கள் முற்றுகையிட்டனா். அதன்பிறகு அனைத்து வகையான பட்டதாரி ஆசிரியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Updated On :3 அக்டோபர் 2024, 11:45 pm

ஊதியம் வழங்காததை கண்டித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை ஆசிரியா் பயிற்றுநா்கள் முற்றுகையிட்டனா். அதன்பிறகு அனைத்து வகையான பட்டதாரி ஆசிரியா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அச் சங்கத்தினா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் செயல்படும், அனைவருக்கும் கல்வித் திட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில், ஆசிரியா் பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், கணக்காளா்கள் பணியாற்றி வருகின்றனா். செப்டம்பா் மாத ஊதியம் வழக்கமான தினத்தில் வழங்கப்படவில்லை. மேலும்,

அக். 3 தேதியாகியும் நிலையில் ஊதியம் குறித்த தகவல் இல்லாததால் கவலையடைந்துள்ளோம். உடனடியாக ஊதியம் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக கோரிக்கை மனுவையும் வழங்கி உள்ளோம் என்றனா்.