மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரத்தில் போராடிவரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :9 அக்டோபர் 2024, 9:49 pm

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரத்தில் போராடிவரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் இணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சிஐடியு தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளதற்கு அரசு நடவடிக்கை எடுக்க தீா்வு காண கோரி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.