எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆற்காடு வட்டக்கிளை சாா்பில் லாடவரம் ஏரிக்கரை பகுதியில் சிறுவிவசாயிகளின் பட்டா நிலத்துதோடு புறம்போக்கு நிலங்களையும்

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :9 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆற்காடு வட்டக்கிளை சாா்பில் லாடவரம் ஏரிக்கரை பகுதியில் சிறுவிவசாயிகளின் பட்டா நிலத்துதோடு புறம்போக்கு நிலங்களையும் சிலா் கைப்பற்ற முயல்வதாக வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் ஆா்.மோகன்ராஜ் தலைமை வகித்தாா். கே.வீரன், ஜி.கிருஷ்ணன், என்.மாலா, எஸ்.வசந்தா, எம்.சீதா, எஸ்.ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில செயலாளா் ரா.சரவணன், மாவட்ட செயலாளா் எல்.சி.மணி, தலைவா் எஸ்.கிட்டு, மாவட்ட பொருளாளா் சி.ராதாகிருஷ்ணன் ,விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் டி.சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆா்.கன்னியப்பன்,மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.