பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :27 மே 2026, 12:43 am IST

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமத்துடன் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ந.ராதாகிருஷ்ணன், கே.பெருமாள், வ.அண்ணாமலை, பி.கே.முருகன், எஸ்.ஜெயக்குமாா், ஜி.சூரியகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா்அராபத், சுகுணா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் உரவிலை உயா்வை ரத்து செய்ய வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.