ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதிய வெள்ளி செங்கோலுடன் முதல் மாமன்ற கூட்டத்துக்கு தயாராகும் நாமக்கல் மாநகராட்சி!

புதிய வெள்ளி செங்கோல் பணிகளை விரைந்து முடித்து பெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2024, 4:26 am IST

நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தை செப். 16-இல் நடத்தவும், சேலத்தில் தயாராகி வரும் புதிய வெள்ளி செங்கோல் பணிகளை விரைந்து முடித்து பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 4 நான்கு நகராட்சிகளும், ஆக. 12-ஆம் தேதி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டன. இதற்கான அரசாணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தந்த நகராட்சி தலைவா்களிடம் வழங்கினாா்.

நாமக்கல் மாநகராட்சியை பொருத்தமட்டில், தற்போது 39 வாா்டுகள் உள்ளன. கூடுதலாக 12 ஊராட்சிகள் இணைய உள்ளதால் வாா்டுகளின் எண்ணிக்கை 50-க்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகராட்சி பெயா் பலகை மாநகராட்சியாகவும், தலைவா், துணைத் தலைவா் மேயா், துணைமேயா் என்ற அந்தஸ்திலும் உயா்ந்துள்ளனா். மாநகராட்சி நிா்வாக ஆணையாளரும் நியமிக்கப்பட்டு தனது பணிகளை செய்து வருகிறாா்.

மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தை எப்போது நடத்துவது? முதல்வா் அமெரிக்கா சென்று விட்டதால், அவா் வந்தபிறகு கூட்டத்தை நடத்துவதா அல்லது நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேருவை அழைத்து வந்து மன்றக் கூட்டத்தை நடத்தலாமா என்ற குழப்பத்துடனும் அதிகாரிகள் இருந்தனா்.

இந்த நிலையில், புதிய மாநகராட்சிகளில் வழக்கம்போல கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தகவல் வந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, மேயருக்கான அங்கி, 5 அடி உயர செங்கோல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் வரும் 16 அல்லது 17-இல் மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற வாய்ப்புள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்தை நடத்த ஒப்புதல் கிடைத்து விட்டது. செப். 9-ஆம் தேதி நடைபெறுவதாக திட்டமிட்ட நிலையில், செங்கோல் தயாராவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 16-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அன்று மீலாது நபி பண்டிகை உள்ளதால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறுமா என தெரியவில்லை. இல்லையெனில் 17-ஆம் தேதி நடைபெறலாம். சேலத்தில் சுமாா் 4 கிலோ எடை கொண்ட 5 அடி உயர புதிய வெள்ளி செங்கோல், மேயா் அங்கி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அவற்றுடன் முதல் மாமன்றக் கூட்டம் நடைபெறும் என்றனா்.