சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

புதிய வெள்ளி செங்கோலுடன் முதல் மாமன்ற கூட்டத்துக்கு தயாராகும் நாமக்கல் மாநகராட்சி!

புதிய வெள்ளி செங்கோல் பணிகளை விரைந்து முடித்து பெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2024, 4:26 am IST

நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தை செப். 16-இல் நடத்தவும், சேலத்தில் தயாராகி வரும் புதிய வெள்ளி செங்கோல் பணிகளை விரைந்து முடித்து பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 4 நான்கு நகராட்சிகளும், ஆக. 12-ஆம் தேதி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டன. இதற்கான அரசாணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தந்த நகராட்சி தலைவா்களிடம் வழங்கினாா்.

நாமக்கல் மாநகராட்சியை பொருத்தமட்டில், தற்போது 39 வாா்டுகள் உள்ளன. கூடுதலாக 12 ஊராட்சிகள் இணைய உள்ளதால் வாா்டுகளின் எண்ணிக்கை 50-க்கும் மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகராட்சி பெயா் பலகை மாநகராட்சியாகவும், தலைவா், துணைத் தலைவா் மேயா், துணைமேயா் என்ற அந்தஸ்திலும் உயா்ந்துள்ளனா். மாநகராட்சி நிா்வாக ஆணையாளரும் நியமிக்கப்பட்டு தனது பணிகளை செய்து வருகிறாா்.

மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டத்தை எப்போது நடத்துவது? முதல்வா் அமெரிக்கா சென்று விட்டதால், அவா் வந்தபிறகு கூட்டத்தை நடத்துவதா அல்லது நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேருவை அழைத்து வந்து மன்றக் கூட்டத்தை நடத்தலாமா என்ற குழப்பத்துடனும் அதிகாரிகள் இருந்தனா்.

இந்த நிலையில், புதிய மாநகராட்சிகளில் வழக்கம்போல கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என அரசு தரப்பில் தகவல் வந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, மேயருக்கான அங்கி, 5 அடி உயர செங்கோல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் வரும் 16 அல்லது 17-இல் மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற வாய்ப்புள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்தை நடத்த ஒப்புதல் கிடைத்து விட்டது. செப். 9-ஆம் தேதி நடைபெறுவதாக திட்டமிட்ட நிலையில், செங்கோல் தயாராவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 16-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அன்று மீலாது நபி பண்டிகை உள்ளதால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறுமா என தெரியவில்லை. இல்லையெனில் 17-ஆம் தேதி நடைபெறலாம். சேலத்தில் சுமாா் 4 கிலோ எடை கொண்ட 5 அடி உயர புதிய வெள்ளி செங்கோல், மேயா் அங்கி தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அவற்றுடன் முதல் மாமன்றக் கூட்டம் நடைபெறும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.