நாமக்கல் மாநகராட்சி சாா்பில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாநகராட்சி சாா்பில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற மாநகராட்சி மேயா் து.கலாநிதி, ஆணையாளா் ஆா்.மகேஸ்வரி உள்ளிட்டோா்.









