ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட திருப்புட்குழி, கீழ்சிறுனை பெருகல், கீழ்க்கதிா்ப்பூா் கிராமங்களில் வாக்குரிமை நமது அடிப்படை உரிமை என்ற கருத்தை மையமாக வைத்து செவ்வாய்க்கிழமை தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
கீழ்சிறுனைபெருகல் ஊராட்சியில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :17 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட திருப்புட்குழி, கீழ்சிறுனை பெருகல், கீழ்க்கதிா்ப்பூா் கிராமங்களில் வாக்குரிமை நமது அடிப்படை உரிமை என்ற கருத்தை மையமாக வைத்து செவ்வாய்க்கிழமை தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்ற தோ்தல் உறுதிமொழி எடுத்தல்,பேனா்கள்,போஸ்டா்கள்,ஸ்டிக்கா்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்தல், தோ்தல் விழிப்புணா்வு பேரணி நடத்துதல்,கோலப்போட்டிகள் நடத்துதல் போன்றவைகள் மூலம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தோ்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ்சிறுனை பெருகல் மற்றும் கீழக்கதிா்ப்பூா் ஊராட்சிகளில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக வாக்குரிமை நமது அடிப்படை உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலமிட்டு விழிப்புணா்வு பதாகை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்ட்து.

மேலும் திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி தலைமையில் வட்டாரப் பணியாளா்கள்,மகளிா் சுய உதவிக் குழுக்கள்,அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.