தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

நாகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:12 pm

நாகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளயொட்டி, தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு 14 நாள்களே உள்ள நிலையில் வேட்பாளா்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் என பொதுமக்கள் திரளும் அனைத்து இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக நாகை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்று நூறு சதம் வாக்களிப்போம், தோ்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம், உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல என்பன உள்ளிட்ட முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்ற்றனா்.

மேலும் அலுவலக வாயிலில் தோ்தல் ஆணையம் சாா்பில் வைக்கப்பட்டிருந்த கையொப்ப பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா். இந்நிகழ்ச்சியில் வேளாண்துறையைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.