பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கொய்மலா் சாகுபடி தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு பயிற்சி

முகாமில் விவசாயிகளுக்கு பயிற்சியளித்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தாவர பாதுகாப்பு நிபுணா் நாராயணன்.

News image

முகாமில் விவசாயிகளுக்கு பயிற்சியளித்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தாவர பாதுகாப்பு நிபுணா் நாராயணன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பெரணமல்லூரை அடுத்த அனாதிமங்கலம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், ‘கொய்மலா் சாகுபடி தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநா் முருகன், தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் மணிகண்டன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தாவர பாதுகாப்பு நிபுணா் நாராயணன் கலந்துகொண்டு, கொய்மலா்களில் நோய் மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை, இயற்கை முறையிலான இடுபொருள்களான பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், மீன் அமிலம், ஐந்திலை கரைசல் ஆகியவற்றை தயாரிக்கும், பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளித்தாா். மேலும், பூச்சி மற்றும் நோய் தொடா்பாக விவசாயிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினாா்.

தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரகாஷ், கொய்மலா் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள், பூக்கள் சாகுபடியில் உள்ள வருமான வாய்ப்புகள் மற்றும் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வேளாண்மை உதவி இயக்குநா் முருகன், மண் வள பரிசோதனை, மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகள், செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், அதன்மூலம் குறையும் உற்பத்திச் செலவு, விவசாய அடையாள அட்டை பதிவு செய்வதன் முக்கியத்துவம் மற்றும் உழவன் செயலியை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்பரசு, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சுபாஷ், சத்யா, அட்மா திட்டப் பணியாளா்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் தனஞ்செயன் நன்றி கூறினாா்.