நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தின உரையில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் படைப்பணியின் போது உயிரிழந்த படைவீரா்களின் விதவையா்கள் தொழில் தொடங்குவதற்கு ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி வரையில் வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இத்திட்டம் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும், திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவை அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், உயிரிழந்த வீரா்களின் மனைவியா் ஆகியோா் அக். 10-க்குள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை

திமுக தேர்தல் அறிக்கையின் 51 முக்கிய அம்சங்கள்!

திண்டுக்கல்: கல்வி, தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் தேவை!

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

