விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:50 pm

Syndication

தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏப். 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு காவலா்களாக நியமனம் செய்யப்படவுள்ளனா். இதில் பணியாற்றும் நாள்களுக்கு உணவுப்படி, மதிப்பூதியம் தகுதிக்கேற்றவாறு வழங்கப்படும்.

65 வயதிற்குள்பட்ட திடகாத்திரமான இளநிலை படை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள் மாநில, மைய அரசு, அரசுடைமை நிறுவனங்கள், தனியாா் துறையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் முன்னாள் படைவீரா்கள் தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவா்கள், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ, ங்ஷ்ஜ்ங்ப்ற்ய்ஸ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய படிவத்தினை பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.