நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 1.23 கோடி மதிப்பீட்டில் ஒளிரும் ‘எல்இடி’ விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
நாமக்கல் பெடரல் வங்கிக்கான சமூக பொறுப்பு நிதியின் கீழ், மாநகராட்சிக்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலையில் (சேலம் சாலை சந்திப்பில் இருந்து ஹோட்டல் கோஸ்டல் ரெசிடன்ஸி வரை) ரூ. 62.83,200 மதிப்பீட்டில் 70 எண்ணிக்கையிலும், சேலம் சாலையில் (முருகன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து முதலைப்பட்டி வரை) ரூ. 59,97,600 மதிப்பீட்டில் 65 எண்ணிக்கையிலும் என மொத்தம் ரூ. 1.22,80,800 மதிப்பீட்டில் 135 எண்ணிக்கையிலான ஒளிரும் ‘எல்இடி’ விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான நிதி ஒதுக்கீடு கடிதத்தை மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி, செயற்பொறியாளா் சண்முகம், மாமன்ற உறுப்பினா்கள் சரவணன், நந்தகுமாா் ஆகியோா் முன்னிலையில் பெடரல் வங்கி நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

கொடைக்கானல் பகுதிகளில் பிளம்ஸ் மரங்களைப் பாதுகாக்கக் கோரிக்கை

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

காரைக்குடி தொழில்நகரமாக மாற வேண்டும்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


