டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில் பங்கேற்கும் நாமக்கல் மாணவி!

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில், நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி இடம் பெற்றுள்ளாா்.

News image
மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில் தோ்வாகி உள்ள நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரிக்கு மாணவி கு.ஸ்ரீநிதியை வாழ்த்திய கல்லூரித் தலைவா் செ.நல்லுசாமி.
Updated On :30 செப்டம்பர் 2024, 9:55 pm

Din

நாமக்கல்: பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில், நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி இடம் பெற்றுள்ளாா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.காம். படித்து வருபவா் மாணவி கு.ஸ்ரீநிதி. இவா், 19 -வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில் தமிழ்நாடு பிரிவில் விளையாடுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அக். 1 முதல் 8 வரையில், ஹரியாணா மாநிலம், குருகிராமில் நடைபெறும் தேசிய அளவிலான 19 வயதுக்கு உள்பட்டோா் மகளிா் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறாா்.

இவா், நாமக்கல் மாவட்ட மகளிா் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ளாா். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவா், பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் திறமையானவா். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேசிய கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாணவி ஒருவா் முதன்முதலாக தோ்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு மாநில மகளிா் கிரிக்கெட் அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீநிதியை, டிரினிடி மகளிா் கல்லூரித் தலைவா் கே.நல்லுசாமி பாராட்டினாா். செயலா் எஸ்.செல்வராஜ், செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், வெள்ளிவிழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் அரசு.பரமேசுவரன், வணிகவியல் துறைத் தலைவா் எம்.சசிகலா, உடற்கல்வி இயக்குநா் வீ.அா்ச்சனா, பேராசிரியா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.