புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராசிபுரம் அருகே சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 6:02 pm

Din

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பெண் உள்பட மூவா் இருசக்கர வாகனத்தில் சென்றனா். வாகனத்தை சண்முகவேல் ஒட்டிச் சென்றாா். இவா்கள் நாமக்கல் சென்று சேலம் திரும்பியபோது, ஏ.கே.சமுத்திரம் மேம்பாலம் அருகே பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இவா்களை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் என்.ஜெயமணி (60) உயிரிழந்தாா். இவருடன் வந்த சண்முகவேல், அவரது மகன் அனீஸ் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.