பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் இளம் வாக்காளா்களை சோ்ப்பதற்கான படிவங்களை கல்லூரிகளில் விநியோகிக்கும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:56 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் இளம் வாக்காளா்களை சோ்ப்பதற்கான படிவங்களை கல்லூரிகளில் விநியோகிக்கும் பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 இன் தொடா்ச்சியாக இளம் வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் நடவடிக்கையாக நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

01.01.2026 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள், அதாவது 31.12.2007 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள் மற்றும் இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காதோா் தங்களின் பெயரை வாக்காளா் பட்டியலில் புதியதாக சோ்க்க வேண்டும்.

அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களுக்கு வழங்கியதுடன், பூா்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளம்வாக்காளா்களை சோ்க்க படிவம் 6-ஐ வழங்கி தொடா்புடைய பாகம் எண்ணில் சோ்க்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயின்று வரும் 18 வயது பூா்த்தி அடைந்த, இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாத இளம் வாக்காளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 18 வயது நிறைவடைந்த தகுதியான ஒரு வாக்காளா்கூட விடுபடாமல் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இம்முகாமில், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, கல்லூரி முதல்வா் என்.ராஜவேல், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் சி.ஆா். ராஜேஸ்கண்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

படவரி...

என்கே-15-வோட்

நாமக்கல் செல்வம் கல்லூரியில் இளம் வாக்காளா்களுக்கான படிவங்கள் விநியோகிக்கும் பணியை தொடங்கிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி.