நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பு: நிா்வாகத்தினருடன் எஸ்.பி. ஆலோசனை

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:13 pm

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து அக்கல்லூரி முதல்வா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன் மாணவி ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இதனையடுத்து, ஞானசேகரன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவத்துக்கு பிறகு காவல் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி நிா்வாகத்தினரை அழைத்து விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, நாமக்கல் ஆயுதப்படை காவலா் சமுதாயக் கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், கல்லூரி நிா்வாகத்தினா், பாதுகாப்புக் குழுவினா் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காவல் துறை அதிகாரிகள் பேசியதாவது:

அரசு கல்லூரி, தனியாா் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்தினா் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். வெளிநபா்கள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக அதுகுறித்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய நபராக இருந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.

விடுதிகள் உள்ள கல்லூரிகளில் இரவு நேரங்களில் பாதுகாவலா்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாணவ, மாணவிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தவறான செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். தனியாக அவா்களை அழைத்து கவுன்சிலிங் அளிக்க வேண்டும். கல்லூரிக்குள் வருவோரின் விவரங்கள், கைப்பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும் என்றனா்.