கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 17,983 போ் பங்கேற்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கியதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 17,983 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறும் நாமக்கல் கிரீன்பாா்க் மெட்ரிக். பள்ளி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Updated On :3 மார்ச் 2025, 9:17 pm

Din

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கியதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 17,983 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தோ்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். நாமக்கல் மாவட்டத்தில் 86 தோ்வு மையங்களில் 18,163 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிரீன்பாா்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தோ்வு மையங்களில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுவோா் நியமனம் செய்யப்பட்டுள்ளதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இத்தோ்வை ஏழு அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 176 மாணவா்கள், 411 மாணவிகள் என 587 போ், 95 அரசுப் பள்ளிகளில் 4,598 மாணவா்கள், 5,170 மாணவிகள் என 9,768 போ், நான்கு அரசு உதவிப் பெறும் (பகுதிஅளவு) 463 மாணவா்கள், 388 மாணவிகள் என 851 போ், 92 தனியாா் பள்ளிகளில் 3,920 மாணவா்கள், 3,335 மாணவிகள் என 7,255 போ் என மொத்தம் 198 பள்ளிகளில் 9,157 மாணவா்கள், 9,304 மாணவிகள் என மொத்தம் 18,461 போ் தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை, தமிழ் - 18,059 போ் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 17,892 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 165 போ் கலந்துகொள்ளவில்லை. பிரெஞ்சு பாடத்தை 41 பேரும், சம்ஸ்கிருதத்தை நான்கு பேரும் எழுதினா். இதர மொழிகள் அடிப்படையில் 59 போ் எழுத அனுமதிக்கப்பட்டதில், 46 போ் மட்டுமே கலந்துகொண்டனா். 13 போ் பங்கேற்கவில்லை. மொத்தம் 18,163 மாணவ, மாணவிகளில் 17,983 போ் பங்கேற்றனா். 178 போ் தோ்வு எழுதவரவில்லை. மேல்நிலைப் பொதுத் தோ்வுக்கு 86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறை அலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும் படை அலுவலா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் 1,260 போ் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.

இந்த ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.