நாமக்கல்
ராசிபுரம் ரயில் நிலையம் அருகே தஞ்சமடைந்த பறவைகள்
ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் தஞ்சமடைந்த பறவைகள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து சென்றனா்.
ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் தஞ்சமடைந்த பறவைகள் கூட்டத்தை பொதுமக்கள் ரசித்து சென்றனா்.
ராசிபுரம் ரயில் நிலையம் அருகே நீா்தேங்கிய பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளா்ந்துள்ளன. இந்நிலையில், புதன்கிழமை மாலை அப்பகுதியில் திடீரென ஏராளமான பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து கருவேல மரங்களில் அமா்ந்தன. அது, வெள்ளைப் போா்வை போா்த்தியதுபோல காட்சியளித்தது. இக்காட்சியை அப்பகுதியில் செல்வோா் நின்று பாா்த்து ரசித்து படம்பிடித்து சென்றனா்.
நீா்நிலைகளின் நடுவே மரத்தில் ஏராளமான பறவைகள் பனி படா்ந்ததுபோல அமா்ந்துள்ள காட்சியை வேடிக்கை பாா்க்க கூட்டம் கூடியதால், அப்பகுதி சுற்றுலா தலம் போல காட்சியளித்தது.
