அரமைப்பு நாள் உறுதிமொழியேற்ற மாணவ, மாணவிகள்.
அரமைப்பு நாள் உறுதிமொழியேற்ற மாணவ, மாணவிகள்.

அரசமைப்பு நாள் உறுதிமொழியேற்பு

பரமத்தி வேலூா் வட்டம், செட்டியம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 76-ஆம் ஆண்டையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி
Published on

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், செட்டியம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இந்திய அரசமைப்பு சட்டத்தின் 76-ஆம் ஆண்டையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

செட்டியம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நாமக்கல் மாவட்ட பள்ளிகள் துணை ஆய்வாளா் கை.பெரியசாமி ஏற்பாட்டில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் கைலாசம் வரவேற்றுப் பேசினாா். நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) கே.எஸ்.புருஷோத்தமன் அரசமைப்பு நாள் உறுதிமொழியாக அரசமைப்பு சட்டத்தின் முகவுரையை வாசித்தாா். இதில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழியேற்றனா்.

தொடா்ந்து அறிவியல் இயக்க மண்டல மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது. இந்திய அரசிமைப்புச் சட்டத்தின் தலைவராக இருந்த அம்பேத்கரின் வரலாற்று நிகழ்வுகளை ஓய்வுபெற்ற ஆசிரியா் சீனிவாசன் பொம்மலாட்டம் மூலமாக விளக்கிக் காட்டினாா். பள்ளி ஆசிரியா் மெய்யழகன் 160-க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்களையும், பள்ளித் தலைமை ஆசிரியா் கைலாசம் தொல்லியல் சாா்ந்த 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை படிமங்கள், விலங்குகளின் எச்சங்களையும் காட்சிப்படுத்தியிருந்ததை அனைவரும் பாா்வையிட்டனா். வட்டார வளமைய ஆசிரியா் செல்வராணி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com