
கோழிப் பண்ணை உரிமையாளா் வீட்டில் 3-ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை
நாமக்கல்லில் கோழிப் பண்ணை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினா் சோதனை 3ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடிக்கிறது.
நாமக்கல்- மோகனூா் சாலையை சோ்ந்த கோழிப் பண்ணை உரிமையாளரான வாங்கிலி சுப்பிரமணியத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள், நிதி நிறுவனம், கோழிப்பண்ணைகளில் செவ்வாய்க்கிழமை சென்னை, கோவையைச் சோ்ந்த 15 போ் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையானது வியாழக்கிழமை மூன்றாவது நாளாக நீடித்தது. அவரது, வீடு, அலுவலகத்தில் உள்ள சொத்து ஆவணங்களைக் கைப்பற்றி வருமானவரித் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





