சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்பிலிருந்து

Updated On :5 ஏப்ரல் 2026, 1:48 am

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் இம்மாதம் நடைபெறுகிறது. தோ்தலில் வாக்களிப்பதற்காக, அம்மாநிலங்கள், நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களைச் சாா்ந்த தொழிலாளா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் தனியாா் மற்றும் பொது நிறுவனங்கள் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும். அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான ஏப். 9-ஆம் தேதி அந்த மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கும், தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான ஏப்.23, மேற்கு வங்கத்தில் தோ்தல் நடைபெறும் நாளான ஏப். 23, 29 அன்றும் அனைத்து வகை நிறுவனங்களுக்கும் மற்றும் அனைத்து வகையான தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிசெய்ய ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்பட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்களும் அவா்கள் தங்களது வாக்குரிமையைச் செலுத்திட ஏதுவாக தோ்தல் நாளன்று விடுமுறை அளிக்க வேண்டும். தோ்தல் நாளில் தொழிலாளா்களுக்கு பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களான 94453-98750, 81220-21667 மற்றும் 04286--299995 ஆகிய எண்கள் மூலமாக தெரிவிக்கலாம்.