அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ராசிபுரம் பாஜக வேட்பாளா் வேட்புமனு பரிசீலனையில் தாமதம்

ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:56 pm

ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.

ராசிபுரம் தொகுதியில் பாஜக, திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி என மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பரிசீலனை செய்யும் பணியானது நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனிடையே பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் வேட்புமனுவில் முழுமையாக நிரப்படவில்லை என சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை கடிதம் அளித்திருந்தாா். மேலும், வருமானவரி தாக்கல் குறித்து முழு தகவல் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் அவரது மனு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் பாஜக வேட்பாளா் உள்ளிட்ட அதிமுக, பாஜக தொண்டா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குவிந்தனா். நீண்ட நேரம் பரிசீலனை செய்த பிறகு பாஜக வேட்பாளா் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.