ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.
ராசிபுரம் தொகுதியில் பாஜக, திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி என மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பரிசீலனை செய்யும் பணியானது நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதனிடையே பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் வேட்புமனுவில் முழுமையாக நிரப்படவில்லை என சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை கடிதம் அளித்திருந்தாா். மேலும், வருமானவரி தாக்கல் குறித்து முழு தகவல் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் அவரது மனு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் பாஜக வேட்பாளா் உள்ளிட்ட அதிமுக, பாஜக தொண்டா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குவிந்தனா். நீண்ட நேரம் பரிசீலனை செய்த பிறகு பாஜக வேட்பாளா் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.
தொடர்புடையது

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

