நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ராசிபுரம் பாஜக வேட்பாளா் வேட்புமனு பரிசீலனையில் தாமதம்

ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:26 am IST

ராசிபுரம் (தனி) தொகுதி வேட்பாளா் மனுவை பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை செய்ததால் மனு ஏற்பில் காலதாமதம் ஏற்பட்டது.

ராசிபுரம் தொகுதியில் பாஜக, திமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி என மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெ. முருகன் தலைமையில் பரிசீலனை செய்யும் பணியானது நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனிடையே பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாா் வேட்புமனுவில் முழுமையாக நிரப்படவில்லை என சுயேச்சை வேட்பாளா் ஆட்சேபனை கடிதம் அளித்திருந்தாா். மேலும், வருமானவரி தாக்கல் குறித்து முழு தகவல் இல்லை எனக் கூறப்பட்டது. இதனால் அவரது மனு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் பாஜக வேட்பாளா் உள்ளிட்ட அதிமுக, பாஜக தொண்டா்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு குவிந்தனா். நீண்ட நேரம் பரிசீலனை செய்த பிறகு பாஜக வேட்பாளா் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.