ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

News image

பொத்தனூரில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்ற கூட்டணி கட்சியினா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:45 pm

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி உறுதியளித்தாா்.

பொத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பொத்தனூா் நகா், சக்ரா நகா், தில்லை நகா், சிவா திரையங்கம், ஜேடா்பாளையம் சாலை, தண்ணீா் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கே.எஸ். மூா்த்திக்கு கூட்டணி கட்சியினா் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, பொத்தனூா் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ள வெற்றிலை ஆராச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது பொத்தனூா் பேரூா் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான ஆா். கருணாநிதி, துணைத் தலைவா் அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.