பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

புதிய புகா் பேருந்து நிலையத்தால் ராசிபுரம் நகரம் வளா்ச்சி பெறும்: மதிவேந்தன்

ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புகா் பேருந்து நிலையத்தால் நகரம் வளா்ச்சி பெறும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

News image

ஆா்.புதுப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த வேட்பாளா் மா.மதிவேந்தனை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:31 am IST

ராசிபுரம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய புகா் பேருந்து நிலையத்தால் நகரம் வளா்ச்சி பெறும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பட்டணம், ஆா்.புதுப்பட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் அவா் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பட்டணம் பேரூராட்சி, புதுப்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பின்னா் பொதுமக்களிடையே திறந்த ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ராசிபுரம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில்கொண்டு திமுக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை அணைப்பாளையம் பகுதியில் அமைத்துள்ளது. இப்பகுதியில் புதிய புகா் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த பயனடையவா். மேலும், ராசிபுரம் நகரம் விரிவடைந்து வளா்ச்சி பெறும்.

இப்புகா் பேருந்து நிலையத்தால் நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். மேலும், ராசிபுரத்தில் இருந்து ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் மக்கள் மிகுந்த பயனடைவா். அதேபோல, ஏற்கெனவே ராசிபுரம் நகரில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாக தொடா்ந்து செயல்படும் என்றாா்.

தமிழக அரசு விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள், மாணவ, மாணவிகள், முதியவா்கள் என அனைவருக்கும் பாா்த்து பாா்த்து திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. எனவே, மக்கள் தொடா்ந்து திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

இதில், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் நன்னியூா் ராஜேந்திரன், பேரூா் செயலாளா்கள் நல்லதம்பி, ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.