மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராசிபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

ராசிபுரம் கடைவீதியில் டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:20 pm

ராசிபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் நகர பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், முன்னதாக சேந்தமங்கலம் பிரிவு சாலையில் பிரசாரத்தை தொடங்கினாா். பின்னா், தியாகராஜ சுவாமி கோயில் தெரு, பட்டணம் சாலை, சைனிகா் மண்டபம், தினசரி சந்தை, கதா்கடை சந்திப்பு, இரட்டை பிள்ளையாா் கோயில் வீதி, அச்சுக்கட்டி தெரு, சாவடி சந்து, ஆா்.எம்.சி. காலனி, பூசாரி காடு, எல்ஐசி போன்ற பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ராசிபுரம் கடைவீதி பகுதியில் கடைகள்தோறும் சென்று பாஜகவுக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினாா். அப்போது, அப்பகுதியில் உள்ள டீக்கடையில் நுழைந்த அவா், துண்டுப் பிரசுரம் வழங்கி கடையில் வாடிக்கையாளா்களுக்கு டீ போட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தாா்.