மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

எஸ்.ஐ. மீது தாக்குதல்: திமுக பிரமுகா் கைது

குமாரபாளையம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 10:54 pm

குமாரபாளையம் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணியும், திமுக சாா்பில் தொழிலதிபா் செ.பாலுவும் போட்டியிடுகின்றனா். தோ்தல் பிரசாரம் நிறைவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரமுகா் சஞ்சித் (24) வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றுள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்து உதவி ஆய்வாளா் ரஞ்சித்குமாா் (32) விசாரிக்க சென்றாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதில், உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டாா். காயமடைந்த அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக பள்ளிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சஞ்சித்தை கைது செய்தனா்.