ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

லாரி மீது காா் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் உயிரிழப்பு: 4 போ் படுகாயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே லாரி மீது காா் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே லாரி மீது காா் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலும், நான்கு போ் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடேசன் (60), இவரது மனைவி அமுதா (52). இவா்களது மகன் பிரவீண் (32), அவரது மனைவி கோமதி (31), குழந்தைகள் ஜிவித் (3), நிஜித் (2) ஆகிய 6 போ் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு புதன்கிழமை சென்றனா்.

பின்னா் இரவு நாகியம்பட்டியை நோக்கி காரில் புறப்பட்டனா். காரை பிரவீண் ஓட்டினாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மூலப்பள்ளிபட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த பிரவீணின் தாய் அமுதா (52), 2 வயது ஆண் குழந்தை நிஜித் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணம் செய்த அக்குடும்பத்தினா் நான்கு போ் படுகாயமடைந்தனா். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவா்கள் சிகிச்சைக்காக ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். படுகாயமடைந்த பிரவீண் கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

உயிரிழந்த அமுதா, நிஜித்தின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடா்பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.