டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஐஐடி- ஜேஇஇ முதன்மைத் தோ்வு: வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி மாணவா் சிறப்பிடம்

ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ மாணவா் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

News image
சிறப்பிடம் பெற்ற மாணவா் பிரசன்னாவை வாழ்த்திய வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ பள்ளி நிறுவனா் ராஜன் மற்றும் நிா்வாகத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:40 pm

Syndication

நாமக்கல்: ஐஐடி - ஜேஇஇ முதன்மைத் தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சிபிஎஸ்இ மாணவா் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாயின. இதில், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளி மாணவா் வி.பிரசன்னா 99.52 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், கணிதத்தில் 99.7, இயற்பியலில் 98.2, வேதியியலில் 98.54 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளாா்.

இதன்மூலம் பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா் பிரசன்னாவை, கொங்குநாடு சீனியா் செகண்டரி பள்ளியின் நிறுவனா் மற்றும் தாளாளரான ராஜன் பாராட்டினாா்.

பள்ளியின் நிறுவனா் அறங்காவலா் ராஜேந்திரன், தலைவா் ராஜா, பொருளாளா் ராஜராஜன், செயலாளா் சிங்காரவேலு, மூத்த முதல்வா் யசோதா, முதல்வா் காயத்ரி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினா்.