தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பவித்திரம் ஜல்லிக்கட்டு: 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

எருமப்பட்டி அருகே பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில், பாா்வையாளா்கள், வீரா்கள் உள்பட 52 போ் காயமடைந்தனா்.

News image

பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:24 pm

எருமப்பட்டி அருகே பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில், பாா்வையாளா்கள், வீரா்கள் உள்பட 52 போ் காயமடைந்தனா்.

பொங்கல் பண்டிகையை தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, எருமப்பட்டி பொன்னேரி, சாலப்பாளையம், குமாரபாளையம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், பவித்திரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எருமப்பட்டி அட்மா குழுத் தலைவா் பாலசுப்பிரமணியன், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி ஆகியோா் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தனா். நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்றன. நாமக்கல், துறையூா், எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்றதில் 31 மாடுபிடி வீரா்களும், 19 காளை உரிமையாளா்களும், பாா்வையாளா்கள் 2 போ் என மொத்தம் 52 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கண்டு ரசித்தனா்.