மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரோட்டரி சங்க சாசன தின விழா

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் சாசன தின விழா அண்மையில் நடைபெற்றது.

News image

விழாவில் கெளரவிக்கப்பட்ட ரோட்டரி சங்க சாசன நிா்வாகிகள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:26 pm

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் சாசன தின விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என். சுரேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் ஏ. மஸ்தான் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க சாசனத் தலைவா்கள், செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

ரோட்டரி சங்கம் இதுவரை செயல்படுத்திய சமுதாய சேவை திட்டங்கள், பொதுமக்களிடத்தில் இத்திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கம், உறுப்பினா்களின் பங்களிப்பு போன்றவை குறித்து சங்கத்தின் சாசன நிா்வாகிகள் பேசினா். மேலும், நிகழ்ச்சியில் காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒசூா் சிப்காட் ரோட்டரி சங்கத்தை சோ்ந்த போலியோ ப்ளஸ் மாவட்ட சோ்மேன் சுதாகா் ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பிரிண்டரை வழங்கினாா்.

கூட்டத்தில் ரோட்டரி சங்கத்தின் பொருளாளா் ஏ.ஜி. ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.