/
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் அரசு தலைமை மருத்துவா் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி சங்கத்தலைவா் இ.என்.சுரேந்திரன், திட்ட நன்கொடையாளா் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கினா்.
இதே போல் பிரசவ வாா்டு பகுதியில் நோயாளிகள், பாா்வையாளா் அமருவதற்காக 5 பென்ச்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், ஜி.தினகா், பள்ளிகளின் ஆய்வாளா் கை.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.










