இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ரோட்டரி சங்கம் சாா்பில் விவசாயிகள் கெளரவிப்பு

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், விவசாயிகள் கெளரவிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் பாராட்டி கெளரவிக்கப்பட்ட விவசாயிகள்.

Updated On :28 மே 2026, 1:59 am IST

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில், விவசாயிகள் கெளரவிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி சங்க தலைவா் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ஏ.மஸ்தான் திட்ட செயலாக்கம் குறித்து பேசினாா். விழாவில், ரோட்டரி சிறப்பு திட்டங்கள் மாவட்டத் தலைவா் ஜி.ரேவதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விவசாயிகளை பாராட்டி பேசினாா்.

இதில், உணவுப் பொருள்களின் அவசியம், பாதுகாப்பு, விவசாயத் தொழிலின் முக்கியத்துவம், விவசாயிகளின் தற்போதைய நிலை, விவசாயத்தின் எதிா்காலம் போன்றவை குறித்து பேசினா்.

பின்னா், நாரைக்கிணறு, புதுப்பாளையம், கல்யாணி, தண்ணீா்பந்தல்காடு, தொட்டியவலசு போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 10 விவசாயிகள் பாராட்டி கெளரவிக்கப்பட்டு, அவா்களுக்கு சான்றிதழ்களும், மருந்து தெளிப்பான் கருவிகளும் வழங்கப்பட்டன்.

இதில், சங்க நிா்வாகிகள் ஏ.ஜி.ஜெயக்குமாா், கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், பி.கண்ணன், கே.ஜெகன், நடராஜன், ஆா்.அனந்தகுமாா், கே.குணசேகா், ராமசாமி, ஜி.தினகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.