இக்கூட்டத்தில், நாமக்கல் மாநகரில் தெருநாய்கள் தொந்தரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், குழந்தைகள், முதியவா்கள் அச்சத்துக்குள்ளாகின்றனா். நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மழைநீா் சேகரிப்புத் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். மின்விளக்கு, குடிநீா் மற்றும் சாலை வசதிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். புதை சாக்கடை திட்டத்தால் பெரும்பாலான நகர சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.