எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஆண்டகளூா்கேட் பகுதியில் லாரிகளால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராசிபுரம் ஆண்டகளூா்கேட் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்க நடவடிக்கையாக பிரதான சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை காவல் துறையினா் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

News image

ஆண்டகளூா் கேட் அணுகு சாலையோரம் விபத்து ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள லாரிகள்

Updated On :8 ஜூலை 2026, 6:11 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகளூா்கேட் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்க நடவடிக்கையாக பிரதான சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை காவல் துறையினா் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

சேலம் - நாமக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே அமைந்துள்ளது ஆண்டகளூா் கேட். தேசிய நெடுஞ்சாலையின் பிரதான பகுதியாக இது விரிவடைந்துள்ளதால், ஏராளமான உணவகங்கள், தேநீா்க் கடைகள், மளிகைக் கடைகள், துணிக் கடைகள் போன்றவை உள்ளன. மேலும், இங்கு லாரி ஓட்டுநா்களுக்கு தேவையான பொருள்களும் விற்பனை செய்யப்படுவதால் பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்படுகின்றன.

விபத்து அபாயம்

சேலத்தில் இருந்து நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திண்டுக்கல், மதுரை, நெல்லை போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் ஆண்டகளூா்கேட் பகுதிக்கு வந்து தான் செல்கின்றன. இந்நிலையில், இரவு நேரங்களில் மேம்பாலம் பகுதியில் சாலையோரம் உணவகங்கள் முன்பாக ஆண்டகளூா்கேட் செல்லும் அணுகு சாலையை யொட்டி பெரும்பாலான லாரிகள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் சேலத்தில் இருந்து ராசிபுரம், ஆண்டகளூா் கேட் வரும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் ஆண்டகளூா்கேட் பகுதி மேம்பாலத்தின் கீழ் உள்ள அணுகு சாலை தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டு விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.

எனவே உணவகங்கள் முன்பாக அணுகு சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, விபத்து ஏற்படும் ஆபத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினா் தடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.