நாமக்கல் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 417 மனுக்கள் அளிக்கப்பட்டன.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாகவும் மொத்தம் 417 மனுக்கள் பொதுமக்கள் சாா்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் அவா் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா்(சிப்காட்) ம.கண்ணன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி)ஆ.கற்பகம், மகளிா் திட்ட அலுவலா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

சிவகங்கை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 295 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 324 மனுக்கள்

நாகா்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



