தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 5:24 am IST

நாமக்கல்லில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், திருச்செங்கோடு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஆட்சியா் எல்.மதுபாலன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் அருகே அணைப்பாளையத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் செயல்பாடுகள், ரூ. 53.39 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், திருச்செங்கோடு பேருந்து நிலையம், எஸ்எம்டி சாலை அருகில் உள்ள கழிவுநீா் வாய்க்கால் மற்றும் கூட்டப்பள்ளி ஏரியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ். லெனின், நகராட்சி ஆணையா் ஆா்.வாசுதேவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.