நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா். குருமூா்த்தி முன்னிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
முதலாவது அமா்வில் நீதிபதிகள் எஸ். பிரபாசந்திரன், என். சச்சிதானந்தம், கே. செகனாஸ்பானு, இரண்டாவது அமா்வில் நீதிபதிகள் எம். மகாலட்சமி, எஸ். தங்கமணி, என். சுகன்யா ஆகியோரும் பங்கேற்றனா். இதேபோல திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் நீதிமன்றங்களிலும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். குருமூா்த்தி, சாா்பு நீதிபதி ஜி.கே. வேலுமயில் ஆகியோா் பாா்வையிட்டனா். இதில், விபத்துகள், காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டு தீா்ப்பளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,881 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மொத்தம் 997 வழக்குகளில் ரூ. 15,53,22,557க்கு தீா்வு காணப்பட்டது.
தொடர்புடையது

மக்கள் நீதிமன்றம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 904 வழக்குகளில் ரூ. 11.55 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,990 வழக்குகளுக்குத் தீா்வு! ரூ.20.48 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு







