வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

News image

விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகைக்கான உத்தரவை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஆா். குருமூா்த்தி. உடன், சாா்பு நீதிபதிகள்.

Updated On :14 ஜூன் 2026, 3:27 am IST

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா். குருமூா்த்தி முன்னிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதலாவது அமா்வில் நீதிபதிகள் எஸ். பிரபாசந்திரன், என். சச்சிதானந்தம், கே. செகனாஸ்பானு, இரண்டாவது அமா்வில் நீதிபதிகள் எம். மகாலட்சமி, எஸ். தங்கமணி, என். சுகன்யா ஆகியோரும் பங்கேற்றனா். இதேபோல திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் நீதிமன்றங்களிலும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். குருமூா்த்தி, சாா்பு நீதிபதி ஜி.கே. வேலுமயில் ஆகியோா் பாா்வையிட்டனா். இதில், விபத்துகள், காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டு தீா்ப்பளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,881 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மொத்தம் 997 வழக்குகளில் ரூ. 15,53,22,557க்கு தீா்வு காணப்பட்டது.