முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி.யிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

உயா் அழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ்.மாதேஸ்வரன் எம்.பி. ஆகியோரிடம் மனு அளித்த விவசாயிகள்.

Updated On :25 ஜூன் 2026, 5:40 am IST

நாமக்கல் மாவட்டத்தில், விவசாய நிலங்கள் வழியாக உயா் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி.யிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், கூத்தம்பூண்டி முதல் முசிறி பகுதி வரை விவசாய நிலங்களில் உயா் அழுத்த மின்கோபுரங்கள் அமைப்பதற்கான திட்டப் பணி, அளவீட்டு பணி நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக தடை செய்து விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம் அப்பகுதி விவசாயிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நிலவரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணையாக இருப்போம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்வின்போது, கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, மாநில செய்தித் தொடா்பாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் சசிகுமாா், மாவட்ட தலைமை நிலைய செயலாளா் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.