ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ரூ. 52.46 லட்சம் உண்டியல் காணிக்கை

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களில் ரூ. 52.46 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

News image

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களில் ரூ. 52.46 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

Updated On :26 ஜூன் 2026, 6:19 am IST

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில்களில் ரூ. 52.46 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் உள்ள உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்படும். அந்த வகையில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் மூன்று கோயில்களில் உள்ள 13 உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

திருச்செங்கோடு தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா் இரா. இளையராஜா மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையில் இப்பணி நடைபெற்றது. இதில் ரூ. 52 லட்சத்து 46 ஆயிரத்து 165 ரொக்கம், 64 கிராம் தங்கம், 140 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.