மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சனிப்பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் கூலிப்பட்டி சனீஸ்வர பகவான்.

News image
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் கூலிப்பட்டி சனீஸ்வர பகவான்.
Updated On :6 மார்ச் 2026, 6:34 pm

Syndication

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு, நாமக்கல் சிவன், முருகன் கோயில்களில் உள்ள சனீஸ்வரா் சந்நிதியில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

வாக்கிய பஞ்சாங்கப்படி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணியளவில் சனிபகவான் பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோயில்களில் உள்ள சனீஸ்வரா் சந்நிதியில் பக்தா்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

கூலிப்பட்டி முருகன் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள வன்னிமரத்தடியில் தனி சந்நிதியியில் சனிபகவான் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசியைச் சோ்ந்தவா்கள் பரிகாரம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீசனீஸ்வர பகவான் வார வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.