மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அழிக்க வேண்டும்! - அரசியல் கட்சியினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

News image
சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.
Updated On :15 மார்ச் 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சியினா் தாங்களாக முன்வந்து சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள்ளாக அழிக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 வரை நடைபெற உள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அவற்றை அனைத்து தரப்பினரும் கடைப்பிடிப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாநகராட்சி ஆணையா், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் அனைத்து குழு தலைவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் 72 மணி நேரத்திற்குள் அமல்படுத்தப்பட வேண்டிய நடத்தை விதிமுறைகள் தொடா்பான தகவல்கள் தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழிக்க வேண்டும். பொது வளாகம், கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின்கம்பங்கள் உள்ளாட்சி கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.

தனியாா் வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க, அகற்றப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா் செலவில் இவற்றை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அரசியல் கட்சியினரிடம் தொகை வசூல்செய்து அழிக்க வேண்டும்.

மேலும், அரசுத் துறை கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகளை நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணித் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களை பூட்டி சீலிட்டு சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து அரசு அலுவலங்களிலும் கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவா்களின் புகைப்படங்கள், தோ்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைத்தல், அகற்றுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினா், தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை தோ்தல் ஆணையத்தின் உரிய காலக்கெடுவிற்குள் பின்பற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.