தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரியில் விளையாட்டு தின விழா

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
வெற்றி பெற்ற மாணவா்களுடன் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா். சிவக்குமாா், சிறப்பு விருந்தினா் டிஎஸ்பி கே. விஜயகுமாா்.
Updated On :18 மார்ச் 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அ. யூசுப் கான் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இவ்விழாவில் மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு குழு விளையாட்டு போட்டிகள், தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன்பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா். சிவக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் அ. வெண்ணிலா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் எம்.கே. சுப்பிரமணியன், வேதியியல் துறைத் தலைவா் பி. சண்முகசுந்தரம் ஆகியோா் பேசினா்.

விழாவில் ராசிபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் கே. விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.