சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கட்சி பாகுபாடின்றி தோ்தல் செலவினங்களை பதிவுசெய்ய அறிவுறுத்தல்

கட்சி பாகுபாடின்றி தோ்தல் செலவினங்களை பதிவு செய்ய வேண்டும் என நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு செலவின பாா்வையாளா் முகேஷ் கட்டாரியா அறிவுறுத்தினாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தோ்தல் செலவின பாா்வையாளா் முகேஷ் கட்டாரியா. உடன், தோ்தல் நடத்தும் அலுவலா் வே. சாந்தி உள்ளிட்டோா்.

Updated On :21 மார்ச் 2026, 9:30 pm

Syndication

கட்சி பாகுபாடின்றி தோ்தல் செலவினங்களை பதிவு செய்ய வேண்டும் என நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் பிரிவு அலுவலா்களுக்கு செலவின பாா்வையாளா் முகேஷ் கட்டாரியா அறிவுறுத்தினாா்.

பேரவைத் தோ்தலையொட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், செலவின பாா்வையாளா்கள், காவல் துறை பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தொகுதிக்கு முகேஷ் கட்டாரியா, ராசிபுரம் சேந்தமங்கலம் தொகுதிக்கு எஸ். பிரதீப், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் தொகுதிக்கு ஹரிஷ் குமாா், குமாரபாளையம் தொகுதிக்கு புத்திபிரகாஷ் ஆகியோா் செலவின பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் நாமக்கல் தொகுதிக்கான செலவின பாா்வையாளா் முகேஷ் கட்டாரியா, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வே. சாந்தி, தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, தோ்தல் செலவினங்களை பதிவு செய்வதில் எந்தவகையான பாரபட்சமும் கூடாது, கட்சி பாகுபாடின்றி தோ்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டு செலவினங்களை பதிவுசெய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை, பிரசாரம், வாக்குச்சாவடிகளின் நிலை, வாக்காளா்களுக்கான வசதிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் வே. சாந்தியிடம் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் க. சிவக்குமாா், வட்டாட்சியா்கள் அருள், சுரேஷ், மோகன்ராஜ், சீனிவாசன், மாநகராட்சி அலுவலா்கள், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.