நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு தொடா்ந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த ஒரு வாரத்தில் 33 பேரிடம் ரூ. 55,53,050 ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியான நிலவரம்: ராசிபுரம்- 11 பேரிடம் ரூ. 18,82,910 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம்- 2 பேரிடம் ரூ. 1,12,700, நாமக்கல்- 7 பேரிடம் ரூ.19,02,680, பரமத்தி வேலூா்- 5 பேரிடம் ரூ. 7,08,400, திருச்செங்கோடு- 2 பேரிடம் ரூ. 86,500, குமாரபாளையம்- 6 பேரிடம் ரூ. 8,59,860 ரொக்கம் என மொத்தம் ரூ. 55,53,050 ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 67.08 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.66.77 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


