கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

6 தொகுதிகளில் ரூ. 55.53 லட்சம் பறிமுதல்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

News image

பறிமுதல்

Updated On :21 மார்ச் 2026, 9:31 pm

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு தொடா்ந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த ஒரு வாரத்தில் 33 பேரிடம் ரூ. 55,53,050 ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொகுதி வாரியான நிலவரம்: ராசிபுரம்- 11 பேரிடம் ரூ. 18,82,910 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம்- 2 பேரிடம் ரூ. 1,12,700, நாமக்கல்- 7 பேரிடம் ரூ.19,02,680, பரமத்தி வேலூா்- 5 பேரிடம் ரூ. 7,08,400, திருச்செங்கோடு- 2 பேரிடம் ரூ. 86,500, குமாரபாளையம்- 6 பேரிடம் ரூ. 8,59,860 ரொக்கம் என மொத்தம் ரூ. 55,53,050 ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.