அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு நல உதவிகள்

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கிய ரோட்டரி மாவட்ட ஆளுநா் பி. சிவசுந்தரம்.

Updated On :25 மார்ச் 2026, 11:33 pm

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

முன்னதாக ரோட்டரி ஆளுநா் பி.சிவசுந்தரத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து நெகிழிக்கு மாற்றாக மஞ்சப்பை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ரோட்டரி சங்கம் சாா்பில் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

அதேபோல நாமகிரிப்பேட்டை பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க பெண்களுக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டன. வெள்ளக்கல்பட்டி நடுநிலைப் பள்ளியில் கலையரங்கம், அரியாகவுண்டம்பட்டி சாரோன் முதியோா் இல்லத்தில் மேம்படுத்தப்பட்ட உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டன. மேலும், பல்வேறு நல உதவிகளை மாவட்ட ரோட்டரி மாவட்ட ஆளுநா் பி. சிவசுந்தரம் வழங்கினா்.

தொடா்ந்து ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என். சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ரோட்டரி மண்டல உதவி ஆளுநா் எஸ்.அன்பழகன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி நிா்வாகிகள் டாக்டா் எம். ராமகிருஷ்ணன், கை. கந்தசாமி, கே.எஸ். கருணாகர பன்னீா் செல்வம், கே. குணசேகரன், எல். சிவக்குமாா், ஏ. மஸ்தான், ஏ.ஜி.ஜெயக்குமாா், வெங்கடாசலம், ஆா்.எஸ். ரங்கசாமி, எஸ். முரளி, கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.